ஹெய்ட்டியில் கடந்த 6 மாதத்தில் 23 லட்சம் பேருக்கு உதவியுள்ளது காரித்தாஸ் அமைப்பு.
ஜூலை 10, 2010. 2இலட்சத்து 20 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கிய இவ்வாண்டு ஜனவரி
12ன் ஹெய்ட்டியின் நில அதிர்ச்சிக்குப் பின்னான இந்த 6 மாதங்களில் அந்நாட்டின் 23இலட்சம்
மக்களுக்கு 4கோடியே 68 இலட்சம் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை ஆற்றியுள்ளதாக அறிவிக்கிறது
கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
15 இலட்சம் பேருக்கு உணவு உதவிகளையும் 4 இலட்சம்
பேருக்கு நல ஆதரவு உதவிகளையும் வழங்கியுள்ளதாக அறிவித்த சர்வதேச காரித்தாஸ் அமைப்பின்
தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga, 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்குத்
தங்குமிட வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.