2010-07-10 16:20:30

ஹெய்ட்டியில் கடந்த 6 மாதத்தில் 23 லட்சம் பேருக்கு உதவியுள்ளது காரித்தாஸ் அமைப்பு.


ஜூலை 10, 2010. 2இலட்சத்து 20 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கிய இவ்வாண்டு ஜனவரி 12ன் ஹெய்ட்டியின் நில அதிர்ச்சிக்குப் பின்னான இந்த 6 மாதங்களில் அந்நாட்டின் 23இலட்சம் மக்களுக்கு 4கோடியே 68 இலட்சம் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை ஆற்றியுள்ளதாக அறிவிக்கிறது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

15 இலட்சம் பேருக்கு உணவு உதவிகளையும் 4 இலட்சம் பேருக்கு நல ஆதரவு உதவிகளையும் வழங்கியுள்ளதாக அறிவித்த சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga, 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்குத் தங்குமிட வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.