2010-07-10 16:22:28

கத்தோலிக்கப் பள்ளிக்கு எதிரான வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து காவல்துறையின் பாராமுகம்.


ஜூலை 10, 2010. வட இந்தியாவில் ரெய்ப்பூர் திருச்சிலுவை பள்ளி முன்பாக நாட்டுவெடிகுண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்று 10 நாட்களுக்கு மேல் கடந்துள்ள போதிலும் காவல்துறையின் விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என கவலையை வெளியிட்டுள்ளார் அப்பள்ளி நிர்வாகி குரு சாந்தி பிரகாஷ் பன்னா.

பள்ளியில் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தபோது இத்தாக்குதல் இடம்பெற்றதில் எவரும் காயம் அடையவில்லை எனினும் இத்தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை என்றார் பல்லோட்டின் சபையைச் சேர்ந்த அக்குரு.

சட்டீஷ்கர் மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி இத்தகைய தாக்குதல்களை ஆதரிப்பதாக ஏற்கனவே கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.