தமிழ் நாடு சிறுபான்மை ஆணையத் தலைவரானஅருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை
அவர்களுக்கு அகில உலகச் சமாதானப் பரிசு வழங்கப்பட்டுள்ளது
ஜூலை 09, 2010 தமிழ் நாட்டில் சிறுபான்மை ஆணையத் தலைவராகவும், SIGNIS இந்தியா என்ற தொடர்புத்துறை
நிறுவனத்தின் தலைவராகவும் பணி புரியும் அருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை அவர்களுக்கு
அகில உலகச் சமாதானப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒருங்கிணைந்த கலாச்சார
நிறுவனத்தின் (United Cultural Convention) தலைவரான J.M.Evans அனுப்பிய செய்தியில், உலகில்
சமாதானத்தை வளர்க்கத் தினமும் பாடுபடும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர் என்று அருள் தந்தைக்கு
வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.அருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை சாந்தோம் கலைத்தொடர்பு
மையத்தின் தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார்.