2010-07-08 15:36:17

புனித மரிய கொரெட்டியைப் போல் இளையோர் தீய சக்திகளை எதிர்த்து நிற்கும் துணிவு கொள்ள வேண்டும் - திருத்தந்தை


ஜூலை 08, 2010 இச்செவ்வாயன்று நினைவு கூறப்பட்ட புனித மரிய கொரெட்டியைப் போல் இளையோர் தீய சக்திகளை எதிர்த்து நிற்கும் துணிவு கொள்ள வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை.
இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இளையோருக்கும், புது மணத் தம்பதியருக்கும், நோயுற்றோருக்கும் வழங்கும் வழக்கமான ஆசியுரையின் போது திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மேலும், இப்புதன் பொது மறைபோதகத்திற்குப் பின், புனித பேதுரு பேராலயத்தின் வெளிப்புற மாடங்கள் ஒன்றில் நிறுவப்பட்ட புனித Annibale Maria di Franciaவின் திரு உருவத்தைத் திருத்தந்தை அர்ச்சித்தார்.குருக்களுக்கும், அருள் சகோதரிகளுக்கும் துறவற சபைகளை உருவாக்கிய புனித Annibale பல அநாதை இல்லங்களை நிறுவியதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இப்புனிதரைப்போல் நற்செய்திப் பணிக்கு இன்னும் பலர் முன் வர வேண்டுமெனும் சிறப்பு வேண்டுதலையும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.