ஸ்பெயின் நாடு திருத்தந்தையை வரவேற்கத் தயாராகிறது - பேராயர் Julian Barrio
Barrio
ஜூலை 07, 2010 இதற்கிடையே, ஸ்பெயினுக்கு இவ்வாண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும்
பயணம் குறித்து இச்செவ்வாயன்று Santiago உயர் மறைமாவட்ட பேராயர் Julian Barrio Barrio
செய்தியாளர்களிடம் பேசினார். புனித யாக்கோபுவின் ஜுபிலி ஆண்டை இந்த 2010ம் ஆண்டு கொண்டாடி
வரும் ஸ்பெயினுக்குத் திருத்தந்தை வருவது வலாற்று சிறப்பு மிக்க ஒரு பயணம் என்று பேராயர்
தெரிவித்தார். நவம்பர் 6 ஆரம்பமாகும் இந்தத் திருப்பயணத்தில் மூன்று முக்கியமான பொது
நிகழ்வுகள் இருக்கும் என்றும், இந்தப் பயணம் குறித்த முழு விவரங்களையும் வரும் செப்டம்பர்
மாதம் வத்திக்கான் வெளியிடும் என்றும், பேராயர் Barrio Barrio தெரிவித்தார்.புனித யாக்கோபுவின்
ஜுபிலி ஆண்டையொட்டி இந்த நவம்பர் மாதம் ஸ்பெயின் செல்லும் திருத்தந்தை, மீண்டும் அடுத்த
2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு நடைபெறும் அகில உலக இளையோர் மாநாட்டிலும் கலந்து கொள்வார்
என்பது குறிப்பிடத்தக்கது.