பூப்போன்ற மிருதுவாய் இருக்கக்கூடியது
எது என விடுகதைப் போட்டால் விடை காண அதிக நேரம் தேவையில்லை.
ஆம். இதயம் தான்
அது.
இத்தனை சிறப்பு நிறைந்த இதயத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறோம்?
ஏன்
இன்னும் திறக்க மறுக்கிறோம்?
உடலுக்குள் ஒளிந்திருக்கும் அதனை மட்டும் தான் திறக்கவும்
முடியும், இலவசமாகக் கொடுக்கவும் முடியும். கொடுத்த பின்னரும் முழுமையாக வைத்திருக்கவும்
முடியும்.