96 உதவித்திட்டங்களுக்கு 9 இலட்சத்து 5ஆயிரம் பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின்
வெஸ்ட்மின்ஸ்டர் மறைமாவட்டம்.
ஜூலை 06, 2010. இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மறைமாவட்டத்தின் ஏழைகளுக்கு உதவுவதற்கென
கடந்த ஆண்டில் மட்டும் தலத்திருச்சபை 9இலட்சம் பவுண்டுகளுக்கு மேல் கொடையாக வழங்கியுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் மறைமாவட்டத்தின் வீடற்ற மக்கள், குடியேற்றதாரர்கள்,
அகதிகள், குழந்தைகள், மாற்றுத்திறனுடையோர், முதியோர், மாணவர்கள் ஆகியவர்களுக்கான திட்டங்களுக்கென
இத்தொகை செலவழிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு மார்ச் வரையான
96 உதவித்திட்டங்களுக்கு 9 இலட்சத்து 5ஆயிரம் பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின்
வெஸ்ட்மின்ஸ்டர் மறைமாவட்டம்.