2010-06-30 14:56:03

தெற்கு சீனாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கத்தோலிக்க அமைப்புகளின் உதவிகள்


ஜூன்30,2010 தெற்கு சீனாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கத்தோலிக்க அமைப்புகள் பல வழிகளிலும் உதவிகள் செய்து வருகின்றன.
தலத் திருச்சபையில் உள்ள கத்தோலிக்கர்கள், நிதி திரட்டுதல், வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பகுதிகளுக்குப் படகுகளில் உணவும், பிற உதவிகளும் எடுத்துச் செல்லுதல் என பல வழிகளிலும் உதவி வருவதாக அருள்தந்தை Philip Cao Xiaixian கூறினார்.வெள்ள நிவாரணம் மட்டும் அன்றி, இந்த மக்களின் எதிர்காலம் குறித்தும் தலத் திருச்சபை அதிகாரிகள் Jinde Charities என்ற சமுதாய சேவை நிறுவனத்துடன் விவாதித்து வருவதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.