2010-06-30 16:05:00

ஜூலை 01 – நாளும் ஒரு நல்லெண்ணம்


முதியோர் இல்லங்கள்.

இளையோரின் பொறுப்பற்ற நிலைகளின் அடையாளங்கள்.

மூத்தக் குடிமக்களின் தனிமைச் சிறை.

அனுபவத்தைத் தாண்டாதவர்கள் அடுத்தவருக்குக் கொடுத்த தண்டனை முகாம்.

கடந்தவைகளை அசைபோடும் காலப்பெட்டகம்.

வெளியில் தெரியா வேதனைகள் புதையுண்ட உலகம்.

முன்னூறு நாள் மடி சுமந்த தாயை முடிவுக்காய் தத்து கொடுத்துள்ள இடம்.

தாரம் வந்தபின் தாய் தந்தையை தாரை வார்த்துள்ள இடம்.

அன்று பாலாய் வந்த குருதி, கண்ணீராய் வீணாகும் இடம்.

முதுமை என்பது சுமையா?

தோள் கொடுத்து நாம் சுமை தாங்கிகள் ஆனால் என்ன?

2007ம் ஆண்டின் முதியோர் பாதுகாப்புச் சட்டம் என்னச் சொல்ல வருகிறது?

பாசம் வைக்கக் கூட ஒரு சட்டம் தேவைப்படுகிறது என்றா?








All the contents on this site are copyrighted ©.