செல்லிடப் பேசியில் தினம் ஒரு விவிலிய வாசகம் - தாய்லாந்து திருச்சபையின் சேவை
ஜூன்30,2010 செல்லிடப் பேசியில் தினம் ஒரு விவிலிய வாசகத்தைப் பெறக்கூடிய சேவையைத் தாய்லாந்து
திருச்சபை ஆரம்பித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாய் குருக்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட
இந்தச் சேவை, தற்போது அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் என்று பாங்காக் உயர் மறைமாவட்ட
தகவல் துறையில் பணிபுரியும் Kaewilai Chitampai கூறினார். ஆண்டொன்றுக்கு 365 baht
அதாவது, 500 ரூபாய் செலுத்துபவர்களுக்கு, அவர்களது செல்லிடப் பேசியில் தினமும் ஒரு விவிலிய
வாசகம் அவர்கள் விரும்பும் நேரத்தில் வழங்கப்படும் என்று Kaewilai விளக்கினார்.பொது நிலை
விசுவாசிகள் வாரத்திற்கு ஒருமுறையே விவிலிய வாசகங்களையும் விளக்கங்களையும் கேட்டு வருவதற்குப்
பதில், துரித கதியில் செல்லும் அவர்களது வாழ்வில், தினமும் இந்த வாசகங்களைப் பெறுவதால்
ஒவ்வொரு நாளும் அவர்கள் உறுதி பெற வாய்ப்புண்டு என்று பாங்காக் உயர் மறைமாவட்ட தகவல்
துறை இயக்குனர் அருள்தந்தை Piyachart Makornkrant கூறினார்.