பீகார் மாநிலத்தின் குரு ஒருவர் கும்பல் ஒன்றால் துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்தப்பட்டுள்ளார்
ஜூன் 29,2010. பீகார் மாநிலத்தின் மொகமா பங்குதள குரு ஒருவர் அடையாளம் தெரியாத கும்பல்
ஒன்றால் துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்தப்பட்டுள்ளார்.
அறையில் தொலைக்காட்சி
நிகழ்ச்சியொன்றைப் பார்த்துக்கொண்டிருந்தபோது சிலரால் மார்பு நோக்கி சுடப்பட்ட குரு மைக்கேல்
இக்னேஷியஸ், தன் கைகளால் அதனைத் தடுக்க முயன்றபோது கைகளில் படுகாயமுற்று மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திங்களன்று இரவு இடம்பெற்ற இத்துப்பாக்கித்தாக்குதலின்
போது அறையிலிருந்த எப்பொருளும் திருட்டுப் போகாத காரணத்தால் இத்தாக்குதலுக்கான நோக்கம்
திருட்டு அல்ல என காவல்துறை அறிவித்துள்ளது.