2010-06-29 15:52:18

ஒரேபாலின திருமணத்தை ஏற்றுக்கொள்ள எந்த ஒரு நாடும் கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்கிறது மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம்


ஜூன் 29,2010. ஒரேபாலின திருமணத்தை ஏற்றுக்கொள்ள எந்த ஒரு நாடும் கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்ற மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்மானத்தை பாராட்டியுள்ளது ஐரோப்பாவின் நீதி மற்றும் சட்ட மையம்.

மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரே பாலின திருமணங்களுக்கான உரிமைகள் வரையறுக்கப்படவில்லை என்ற இம்மையம், ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்க அரசுகளை வலியுறுத்தக்கூடாது என்ற நீதி மன்ற தீர்மானம் நியாயமானதே எனவும் கூறியது.

தங்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என ஆஸ்திரியாவின் இரு ஆண்கள், மனித உரிமைகள் மற்றும் குடும்ப வாழ்விற்கான உரிமைகள் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் இம்முடிவை அறிவித்துள்ளது மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதி மன்றம்.








All the contents on this site are copyrighted ©.