ஜூன்26,2010 ஏழை நாடுகளில் குழந்தை இறப்பைக் குறைக்கவும், பிரசவத்தின் போது இறக்கும்
தாய்மார்களைக் காப்பாற்றவதற்குமென 2015ம் ஆண்டுக்குள் 730 கோடி டாலரை வழங்குவதற்கு உலகத்
தலைவர்களும் உதவி செய்யும் குழுக்களும் உறுதியளித்துள்ளன என்று கனடா நாட்டுப் பிரதமர்
ஸ்டீபன் ஹார்ப்பர் கூறினார்.
கனடாவில் இரண்டு நாள் கூட்டம் நடத்திய தொழிற் வளர்ச்சியடைந்த
ஜி-8 நாடுகளின் இறுதி அறிக்கை குறித்துக் குறிப்பிட்ட ஹார்ப்பர், ஜி-8 நாடுகள் 500 கோடி
டாலரையும் இதில் அங்கம் வகிக்காத நியூசிலாந்து, நார்வே மற்றும்பிற அமைப்புகள் 230 கோடி
டாலரையும் வழங்க உறுதியளித்துள்ளன என்று தெரிவித்தார்.
குழந்தை பிறப்பின் போது
ஆண்டுக்கு ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட தாய்மார் வீதம் இறக்கின்றனர் என்று ஒரு கணக்கெடுப்பு
கூறுகிறது.