2010-06-21 15:56:00

வியட்நாமுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான கூட்டம் இவ்வாரம் வத்திக்கானில் இடம்பெற உள்ளது.


ஜூன் 21, 2010 வியட்நாமில் திருச்சபை நிலைகள் குறித்து விவாதிக்க வத்திக்கான் மற்றும் வியட்நாம் அரசு குழுக்களின் கூட்டம் இப்புதன் மற்றும் வியாழன் தினங்களில் வத்திக்கானில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான உயர்மட்டக் குழுக்களின் இக்கூட்டம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை ஆழப்படுத்துவது மற்றும் முன்னேற்றுவது குறித்து விவாதிக்க உள்ளது.

வியட்னாமில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் இவ்விரு தரப்பினரிடையே இடம்பெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இவ்வாரத்தில் வத்திக்கானில் இடம்பெறும் கூட்டம் இருக்கும் என்றார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு பெதரிக்கோ லொம்பார்தி.








All the contents on this site are copyrighted ©.