2010-06-18 15:08:33

மியான்மாரில் இடம் பெறும் மனித சமுதாயத்திற்கெதிரானக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐ.நா.விசாரணைக் குழு நியமிக்கப்படுமாறு CSW வேண்டுகோள்


ஜூன்18,2010 மியான்மாரில் இடம் பெறும் மனித சமுதாயத்திற்கெதிரானக் குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐ.நா., விசாரணைக் குழு ஒன்றை நியமிக்குமாறு CSW என்ற உலகக் கிறிஸ்தவத் தோழமை அமைப்பு கேட்டுள்ளது.

மியான்மார் எதிர்க் கட்சித் தலைவி ஆங் சான் சு கியின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு இவ்விண்ணப்பத்தை ஐ.நா.வுக்கு முன்வைத்துள்ளது CSW அமைப்பு.

ஜூன் 19ம் தேதி இச்சனிக்கிழமை தனது 65வது பிறந்தநாளைச் சிறப்பிக்கிறார் ஆங் சான் சு கி. இவர் ஏறத்தாழ 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.