ஜூன்18,2010 இந்திய தேசிய செர்வைட் இளையோர் மாநாடு இவ்வெள்ளியன்று திருச்சிக்கருகிலுள்ள
தோகைமலையில் தொடங்கியுள்ளது.
திருச்சி மரியின் ஊழியர் சபை சகோதரிகள் நடத்தும்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து ஏறத்தாழ 500 இளைஞர், இளைஞிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவின்
பல மாநிலங்களில் இச்சபையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இவ்விளையோர் கலந்து
கொள்ளும் இந்தத் தேசிய மூன்று நாள் மாநாடு, கடவுளுக்கும் நாட்டிற்கும் என்ற தலைப்பில்
இடம் பெறுகின்றது.
ஆளுமையின் தீவிர வளர்ச்சியின் காலம் இளமை, ஆளுமையின் அனைத்து
ஆற்றல்களும் மலரும் நேரம் இளமை, குழப்பமும் ஏமாற்றமும் நிறைந்தது இளமை, நாட்டை வளமாக்குவதில்
இளமை போன்ற தலைப்புகளில் இந்நாட்களில் சொற்பொழிவுகளும், பகிர்வுகளும் கலைநிகழ்ச்சிகளும்
நடைபெறுகின்றன.