2010-06-16 15:35:32

தமிழ் விடுதலைப் புலிகள் பலருக்கு கத்தோலிக்க, இந்து முறைப்படி திருமணச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன


ஜூன்16,2010 மறு வாழ்வு மையங்களிலுள்ள தமிழ் விடுதலைப் புலிகள் பலருக்கு இந்த ஞாயிறன்று கத்தோலிக்க, இந்து முறைப்படி திருமணச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.
கத்தோலிக்க விசுவாசத்தில் இவர்களுக்குப் புது வாழ்வு அளித்த திருப்தி தனக்கு இருப்பதாக, இந்தத் திருமண அருட்சாதனத்தில் 12 திருமணத் தம்பதியரை இணைத்து வைத்த அருட்தந்தை அந்தோணி செபமாலை கூறினார்.
இந்தத் திருமண அருட்சாதனத்திற்கான வகுப்புகளை அருட் சகோதரிகளும் குருக்களும் நடத்தி வந்ததாக மன்னார் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணி விக்டர் சூசை தெரிவித்தார்.
மறு வாழ்வுத் திட்டங்களில் கலந்து கொள்ளும் வரை இந்த விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது வாழ்க்கைத் துணைகளுக்கும் தங்கும் இடம், நிதி உதவி ஆகியவை வழங்கப்படும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.கடந்த 26 ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவில், ஏறத்தாழ 12,000 தமிழ் விடுதலைப் புலிகள் அரசின் மறு வாழ்வுத் திட்டங்களில் பங்கு பெற்று வருவதாகச் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.