"இங்கிலாந்தில் திருத்தந்தை" என்ற திருத்தந்தையின் பயணம் குறித்த தகவல்கள் அடங்கிய
ஒரு சிறு புத்தகம் வெளியிடப்பட்டது
ஜூன்16,2010 இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் உள்ள பங்குகளில் "இங்கிலாந்தில்
திருத்தந்தை" என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று ஒரு சிறு புத்தகம் வெளியிடப்பட்டது. திருத்தந்தையின்
இப்பயணம் குறித்த விவரங்கள், இங்கிலாந்தில் திருச்சபையின் பங்கு, விசுவாசத்திற்கான அழைப்பு
என்று பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், இங்கிலாந்தில் திருச்சபையின் பாரம்பரியத்தை
மக்களுக்கு எடுத்துரைக்க ஒரு வாய்ப்பாக அமைகிறதென பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார். திருத்தந்தை
ஒருவர் இங்கிலாந்துக்கு அதிகாரப் பூர்வமாகத் திருப்பயணம் மேற்கொள்ளும் இந்த வரலாற்று
நிகழ்வின் போது, திருச்சபைக்கும், இங்கிலாந்துக்கும் உள்ள உறவைக் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு
மக்கள் விடைகள் பெற முடியும் என்று இந்தச் சிறு கையேட்டின் முன்னுரையில் பேராயர் நிக்கோல்ஸ்
கூறியுள்ளார்.திருத்தந்தையின் இந்தத் திருப்பயணம் செப்டம்பர் 16 முதல் 19 வரை நடைபெறும்
என்றும், இந்தப் பயணம் குறித்த விவரமானத் தகவல்கள் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்றும்
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.