“என்ன தேசமோ, இது
என்ன தேசமோ” என்று நம் நாட்டைப் பற்றி பல நேரங்களில், பல வழிகளில் புலம்பி வருகிறோம்.
இதோ மின்னஞ்சல் மூலம் வந்த மற்றொரு புலம்பல்.
அவசர உதவிக்கென வரும்
‘ஆம்புலன்ஸை’விட, நம் நாட்டின் பெருநகரங்களில் Pizza வேகமாக வந்து சேருகிறது. நம்
நாட்டில், கார் வாங்கும் கடனுக்கு 5 விழுக்காடு வட்டி. ஆனால், கல்விக்கான கடனுக்கு 12
விழுக்காடு வட்டி செலுத்த வேண்டும். நாம் அணியும் காலணிகள் தூசி படாத AC கடைகளிலும்,
நாம் உண்ணும் காய்கள் புழுதி படிந்த பாதை ஓரங்களிலும் விற்கப்படுகின்றன. எலுமிச்சை
சாறு என்ற பெயரில் நாம் குடிக்கும் பானம் செயற்கைப் பொருட்களில் உருவாகிறது, ஆனால் பாத்திரங்களைக்
கழுவப் பயன்படுத்தப்படும் திரவங்களில் இயற்கையான எலுமிச்சைச் சாறு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.