1846 - ஒன்பதாம் பத்திநாதர் என்ற திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறத்தாழ 32 ஆண்டுகள்
பாப்பிறையாக இருந்த இவர், பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக அதிக காலம் பொறுப்பில் இருந்த
திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். 1897 - ஹவாய்க் குடியரசை அமெரிக்க ஐக்கிய நாட்டுடன்
இணைக்கும் உடன்பாடு நிறைவேற்றப்பட்டது. 1940 - லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.
1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரராக ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, ‘வோஸ்டோக்
6’ என்ற விண்கலத்தில் பயணமானார்.1976 - தென்னாப்பிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின
மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566
மாணவர்கள் கொல்லப்பட்டனர்.