மிகஅழகான காங்கோ - கத்தோலிக்கத் திருச்சபையின் முயற்சிகள்
ஜூன்12,2010 காங்கோ ஜனநாயகக் குடியரசு விடுதலை அடைந்ததன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்களின்
ஒரு கட்டமாக அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை, என்றுமில்லாத மிக அழகான காங்கோவை உருவாக்குவதற்கான
முயற்சிகளில் இறங்கியுள்ளது.
காங்கோவின் சமூகக் கட்டமைப்பைச் சீர்படுத்தும் நோக்கத்தில்
பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை, கின்ஷாசா கத்தோலிக்கப்
பல்கலைகழகத்தில் மூன்று நாள் கருத்தரங்கையும் நடத்தியுள்ளது.
பொன்விழா என்றால்,
நாம் எங்கிருந்து வந்தோம், நாம் எப்படி இருக்கிறோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைச்
சிந்திப்பதே என்றுரைத்த ஆயர்கள், நாட்டின் நலனுக்குக் கேடு ஏற்படும் விதத்தில் இடம்பெற்ற
தவறுகளுக்காகக் கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் நாட்டினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நீதி
அமைதி, பணி என்ற விருதுவாக்கைக் கொண்டுள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு 1960ம் ஆண்டு ஆகஸ்ட்
16ம் தேதி விடுதலை அடைந்தது. இந்நாடு 1997ம் ஆண்டுவரை சயீர் என்று அழைக்கப்பட்டது.