உலக கோப்பை கால்பந்து போட்டியை வைத்து சூதாடும் விசிறிகள் குறித்து ஹாங்காங் திருச்சபை
கவலை
ஜூன்12,2010 தென்னாப்ரிக்காவின் ஜோஹானஸ்பர்கில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து
போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் விசிறிகள் குறித்து ஹாங்காங் திருச்சபை பணியாளர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.
சூதாட்டம் தன்னிலே நல்லது அல்ல என்று எச்சரித்துள்ள இயேசு
சபை அருள்தந்தை Robert Ng Chi-fun, கால்பந்து போட்டியை வைத்து விளையாடும் சூதாட்டம் ஏமாற்றத்திற்கும்
இட்டுச் செல்லக்கூடும் எனக் கூறியுள்ளார். இவர், ஹாங்காங் தூயஆவி குருத்துவக் கல்லூரியில்
நன்னெறி இறையியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
மேலும், கால்பந்து போட்டியை
வைத்து சூதாடும் மக்களில் பெரும்பாலானோர் 18க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று,
இந்தச் சூதாட்டம் குறித்து 2003ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை ஆய்வு நடத்திய ஹாங்காங்
காரித்தாஸ் நிறுவனம் அறிவித்தது.