இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் - திருச்சபை மனித உரிமை
நடவடிக்கையாளர்
ஜூன் 12, 2010 ஒரிசா மாநிலத்தில் பூர்வீக இனத்தவரும் தலித் இனத்தவரும் சுரண்டப்படுவதால்
இந்தியாவிலேயே அம்மாநிலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் என்று திருச்சபை மனித
உரிமை நடவடிக்கையாளர் ஒருவர் கூறினார்.
பூர்வீக இனத்தவரும் தலித் இனத்தவரும் அதிகமாக
வாழும் பகுதிகளை பல்வேறு தொழிற்சாலைகளும் வியாபாரிகளும் ஆக்ரமிப்பதால் குற்றங்கள் மலிந்து
கிடக்கின்றன என்று அருட்தந்தை நிக்கோலாஸ் பார்வா அறிவித்தார்.
இந்த மக்கள் எப்பொழுதெல்லாம்
கொதித்து எழுகிறார்களோ அப்பொழுதெல்லாம், கந்தமால் மாவட்டத்தில் இடம் பெற்றது போன்று,
அவர்கள் வன்முறையால் நசுக்கப்படுகின்றனர் என்று அக்குரு மேலும் கூறினார்.
ஒரிசாவின்
3 கோடியே 68 இலட்சம் மக்களில் சுமார் 40 விழுக்காட்டினர் பூர்வீக மற்றும் தலித் இனத்தவர்.
இந்த மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்களில் ஏறக்குறைய 90 விழுக்காடு போதிய ஆதாரங்கள்
இன்றி நிரூபிக்கப்படாமல் இருக்கின்றது என்று அண்மையில் மத்திய சமூகநீதி அமைச்சர் தனது
அதிர்ச்சியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.