2010-06-11 15:45:35

மத்திய ஆப்ரிக்காவில் ஆறு நாடுகள் சிறார்ப் படைப்பிரிவில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளன


ஜூன்11,2010 சிறார்ப் படைப்பிரிவில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கு மத்திய ஆப்ரிக்காவில் ஆறு நாடுகள் தீர்மானித்திருப்பதை வரவேற்றுள்ளது யூனிசெப் என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறார் அமைப்பு.

காமரூன், சாட், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, நைஜர், நைஜீரியா, சூடான் ஆகிய ஆறு நாடுகளும், சிறார் பற்றிய சர்வதேச உரிமைகள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் தீர்மான அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்நடவடிக்கை, ஆப்ரிக்காவின் புதிய தொடக்கமாக இருக்கின்றது என்று பாராட்டினார் சாட் நாட்டிலுள்ள யூனிசெப் பிரதிநிதி Marzio Babille.

சிறார் விபசாரம், சிறார் படைவீரர், சிறார் வியாபாரம் பற்றிய சர்வதேச ஒப்பந்தங்களை 2012ம் ஆண்டுக்குள் எல்லா நாடுகளும் முழுமையாய் அமல்படுத்துமாறு கடந்த மாதத்தில் ஐ.நா.பொதுச் செயலர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.