பிலிப்பைன்ஸின் புதிய அரசுத்தலைவரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயர்கள் ஆதரவு
ஜூன்11,2010 பிலிப்பைன்சில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத்தலைவர் Benigno
Aquino III வின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை,
அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டுமென்று அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிலிப்பைன்சில்
தேசிய அளவில் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்நாட்டு காங்கிரஸ் அவை, நாட்டின்
15வது அரசுத்தலைவர் Benigno Aquino என்றும் உதவி அரசுத்தலைவர் Jejomar Binay என்றும்
இவ்வாரத்தில் அறிவித்தது.
புதிய அரசுத்தலைவரின் கொள்கைகள் செயல்வடிவம் எடுக்க
ஆயர்கள் உதவுவதாக உறுதி கூறிய, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nereo Odchimar,
இவர் நேர்மையான அதிகாரிகளை நியமிப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
மனித
உரிமைகளை மேம்படுத்துதல், ஊழலைக் குறைத்தல், வரிகள் மீது கடுமையான கொள்கைகளைக் கொண்டு
வருதல் உட்பட பல கோட்பாடுகளைத் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்திருந்தார் அக்குய்னோ.