உலகத்தில் ஒருநாளே வாழ்ந்தாலும் வீரனாகப் பெருமிதத்துடன் வாழ வேண்டும்! வரலாறு படைத்திடவே
வந்தோம் என்று வலிமையுடன் காலடிகள் பதிக்க வேண்டும்! வழிநெடுக முள்ளிருக்கும்; எனினும்
வசந்தம் அருகில் என்ற எண்ணம் வேண்டும்! இரவைத் தொடாத பகல் இல்லை! வெயிலைத் தாண்டாத நிழல்
இல்லை. புயலைக் கடக்காத அமைதி இல்லை. முட்கள் இல்லாத ரோஜா இல்லை புனித அசிசி பிரான்சிஸ்
வாழ்ந்த இடத்தைத் தவிர. எனவே இந்தப் பூமியில் எனக்கு யாரும் இல்லை என்ற சோகக் கடலில்
மூழ்கிவிடாமல் உள்மனஆற்றலை உணரச் சிந்தையைச் சீர்படுத்து. அறிவைப் பட்டை தீட்டு. என்றும்
எப்பொழுதும் நற்சிந்தனையை மனத்தில் ஓடவிடு. தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தைக் கையில் எடு.
கூடவே விவேகத்தையும் கூட்டிச்செல். உனது நினைப்பெல்லாம் வெற்றியாக மாறும்! உனது கனவுகளும்
நனவாய்ப் பூக்கும்!