2010-06-09 15:51:06

விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடை - மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera


ஜூன்09,2010 மனிதர்கள் மேற்கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடையென்றும், வாழ்வின் பல மதிப்பீடுகளைப் பின் பற்ற இவை அதிகம் உதவும் என்றும் மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera கூறினார்.
இவ்வெள்ளியன்று தென் ஆப்ரிக்காவில் துவங்க இருக்கும் உலகக் கால்பந்து போட்டிகளுக்குச் செல்லும் மெக்சிகோ நாட்டு கால் பந்தாட்ட வீரர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த கர்தினால் Carrera இவ்வாறு கூறினார்.
விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர்களைப் போல் விசுவாச வாழ்வில் கிறிஸ்துவர்களும் ஆர்வமாய் பங்கேற்க வேண்டுமென கூறிய புனித பவுலின் சொற்களை நினைவு படுத்திய கர்தினால் Carrera, தியாகங்கள் இன்றி எந்த ஒரு நல்ல முடிவும் ஏற்படுவது கடினம் என்று கூறினார்.இந்த உலகின் பரிசுகள், புகழ் எல்லாம் மறையக் கூடியவை ஆனால், மாறாமல், மறையாமல் இருக்கும் நிறைவாழ்வை நாடுவதே நம் கடமை என்பதையும் பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.