2010-06-08 16:10:32

இரு கொரிய நாடுகளுக்கும் இடையேயான ஐக்கியம் குறித்து தென்கொரிய தலத்திருச்சபை


ஜூன்08,2010 இரு கொரிய நாடுகளுக்கும் இடையேயான ஐக்கியம் அதன் போக்கிலேயே அவசரமின்றி இடம்பெறவேண்டும் எனவும், வட கொரியாவிற்கான நற்செய்தி அறிவிப்பு என்பது அப்பகுதி அகதிகளிடையேயான பணியாக இருக்கவேண்டும் என தென் கொரியக் கத்தோலிக்கர்கள் விரும்புவதாகவும் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றுத் தெரிவிக்கிறது.
வடகொரியாவிற்கு நற்செய்தியை எடுத்துச்செல்ல தென்கொரிய பொதுநிலை விசுவாசிகளுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும் எனவும் கத்தோலிக்கர்கள் விண்ணப்பித்துள்ளனர்.1950ம் ஆண்டு கொரியப் போர் துவக்கப்பட்டதன் 60ம் ஆண்டு நினைவையொட்டி நடத்தப்பட்ட இவ்வாய்வில், கத்தோலிக்கர்கள் இரு கொரிய நாடுகளின் ஒன்றிணைப்பிற்கு தயாரிப்பதற்கு அவர்களுக்கிருக்கும் கடமை குறித்தும் எடுத்தியம்பியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.