2010-06-08 16:10:45

அன்னை தெரேசாவை புனிதையாக அறிவிப்பதற்கு மேலும் ஒரு புதுமைக்காக திருச்சபை காத்திருக்கிறது


ஜூன்08,2010 அன்னை தெரேசாவை புனிதையாக அறிவிப்பதற்கு முன்னால் மேலும் ஒரு புதுமைக்காக திருச்சபை காத்திருப்பதாக தெரிவித்தார் அன்னை தெரேசாவின் அந்நிலைக்கானத் தயாரிப்புக்களைக் கவனித்து வரும் குரு Brian Kolodiejchuk.
அன்னை தெரேசாவால் 1984ம் ஆண்டுத் துவக்கப்பட்ட குருக்களுக்கான பிறரன்பு மறைபோதகர்கள் சபையின் அதிபரான குரு Kolodiejchuk பேசுகையில், முத்திப்பேறு பெற்ற அன்னைதெரேசாவின் பரிந்துரைகளை வேண்டியதன் வழி கொடைகள் பலவற்றைப் பெற்றதாக எண்ணற்றோர் அறிவித்துள்ள போதிலும், புதுமை என்ற வகையில் இதுவரை எதுவும் கிட்டவில்லை எனவும் அதற்காகச் செபித்து வருவதாகவும் கூறினார்.மனிதக் குலத்தின் புனிதத்தன்மை குறித்து ஓர் ஆழமான அறிவைக் கொண்டிருந்த அன்னை தெரேசா, மற்றவர்களுக்கான பணியில் நம்மையேக் கையளிக்கும்போதுதான் உண்மையான மகிழ்வையும் நிறைவையும் காணமுடியும் என்பதை நமக்குக் காண்பித்துச் சென்றுள்ளார் என்றார் பிறரன்பு மறைபோதகர்கள் சபையின் அதிபரான குரு Kolodiejchuk.







All the contents on this site are copyrighted ©.