2010-06-06 14:52:45

ஜூன் 6 Maronite பேராலயத்தில் திருத்தந்தையின் உரை


அருள் நிறை மரியாவின் பேராலயத்தைக் காண்பதில் பெரிதும் மகிழ்கிறேன். இந்தக் கோவிலுக்கு வந்திருக்கும் வேளையில், இந்தத் தீவில் உள்ள அனைத்து Maronite கோவில்களையும் மனத்தால் தரிசிக்கிறேன். பழம்பெரும் சமுதாயமான உங்கள் அனைவரோடும் மனதால் நெருங்கி வருகிறேன்.
பல்வேறு போராட்டங்கள் மத்தியில் இதுவரை உங்கள் விசுவாசத்தைக் காத்து வந்திருக்கிறீர்கள், இனியும் காத்து வருவீர்கள் என்று ஆசிக்கிறேன்.
கிறிஸ்துவர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் ஆலயத்தைக் கட்டி எழுப்பும் கற்கள் என்று புனித பேதுரு கூறிய வார்த்தைகளை இந்தப் பேராலயத்தில் நான் நினைவு கூருகிறேன். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துவின் மறைபொருளான உடலைக் கட்டி எழுப்பும் கடமையைப் பெற்றுள்ளோம்.உங்களையும், உங்கள் குடும்பங்களையும், சிறப்பாக உங்கள் குழந்தைகளையும் புனித Maronன் பரிந்துரைக்கும், பாதுகாவலுக்கும் ஒப்படைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்குகிறேன்.







All the contents on this site are copyrighted ©.