2010-06-01 13:10:30

புனித பூமியின் அமைதிக்கான ஜெபத்திற்கு உலக கிறிஸ்தவ சபைகள் அழைப்பு.


ஜூன் 01, 2010. இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் நீதியான அமைதி கிட்ட வேண்டும் என ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஜெபிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது உலக கிறிஸ்தவ சபைகளின் அவை.

புனித பூமியில் அமைதிக்கான ஜெப வாரத்தை சிறப்பித்து வரும் உலகக் கிறிஸ்தவ சபைகளின் இவ்வவை, இத்திங்கள் காலை இஸ்ரேல் துருப்புகளின் தாக்குதலில் உதவிப்பணியாளர்கள் 19 பேர் கொல்லப்பட்டது குறித்தக் கவலையையும் வெளியிட்டுள்ளது.

Gaza பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த மனிதாபிமானக் கப்பல் தாக்கப்பட்டு பணியாளர்கள் கொல்லப்பட்ட சூழலில் அமைதிக்கன நம் அனைவரின் ஒன்றிணைந்த குரல் அதிகம் அதிகமாகத் தேவைப்படுகின்றது என்றார் இவ்வவையின் தலைவர் குரு Olave Fykse Tveit.

43 ஆண்டுகளுக்கு மேலான ஆக்ரமிப்பால் எண்ணற்றத் துன்பங்களும் அநீதிகளும் இடம்பெற்றுள்ளன என்ற உலக கிறிஸ்தவ சபைகளின் அவை, மோதல்கள் முடிவுக்கு வரவேண்டிய நேரம் வந்துள்ளது எனவும் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.