2010-06-01 10:54:04

ஜூன்02 நாளுமொரு நல்லெண்ணம்


மகனே, உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு. அதில் உறுதியாக இரு: துன்ப வேளைகளில் பதற்றமுடன் செயலாற்றாதே. ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்: அவரை விட்டு விலகிச் செல்லாதே. உன் வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய். இழிவுவரும்போது பொறுமையாய் இரு. என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்: உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே. ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே: கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே. உள்ளம் உடைந்தோர்க்குத் துயரங்களைக் கூட்டாதே: உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே: உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே. ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால், அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்குச் செவிசாய்ப்பார் என்கிறது சீராக் புத்தகம்.








All the contents on this site are copyrighted ©.