ஜூன் 01, 2010. உள்நாட்டு மோதல்களால் சொமாலியத் தலைநகரில் ஏறத்தாழ 17ஆயிரம் குடும்பங்கள்
தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான
அமைப்பு தெரிவிக்கிறது.
உள்நாட்டு மோதல்களால் மே மாதத்தில் மட்டும் அறுபது பேர்
உயிரிழந்துள்ளதாகவும், கடந்த இரு வாரங்களாக நிலைமை மிகவும் சீர்கேடடைந்துள்ளதாகவும் கூறுகிறது
UNHCR அமைப்பு.
உள்நாட்டு மோதல்களால் இவ்வாண்டில் சொமாலியாவில் அகதிகளாகியுள்ளோரின்
எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை எட்டியுள்ளதாகவும் அவ்வமைப்பால் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.