மணிப்பூர் பொருளாதாரத் தடைகளுக்குத் தீர்வு காண கிறிஸ்தவ சபைகளின் முயற்சி.
மே 31, 2010. மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து இருந்து வரும் பொருளாதாரத் தடைகளுக்குத்
தீர்வு காணும் நோக்கில் அம்மாநில முதல்வரைச் சந்தித்தனர் மணிப்பூர் கிறிஸ்தவ சபைகளின்
பிரதிநிதிகள்.
மாவட்ட அவைகளுக்கு போதிய அதிகாரம் வழங்கப்படவில்லை என மாவட்ட அவைத்
தேர்தல்களை எதிர்க்கும் நாகா மாணவர் இயக்கம் சில சாலைகளை மறித்து பொருளாதாரத் தடைகளை
ஏப்ரல் மாதம் 11ந்தேதியிலிருந்து அமல்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்கு தீர்வு காண
அரசுத்தலைவரைச் சந்தித்துள்ளன கிறிஸ்தவ சபைகள்.
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு
காணலாம் என்ற தங்கள் ஆலோசனையை ஏற்று நாகா குழுக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முதல்வர்
Okram Ibobi Singh உறுதியளித்துள்ளதாகவும் கூறினர் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.