கத்தோலிக்கக் குருக்களை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளது சைன அரசு.
மே 31, 2010. திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள
சைனக் கத்தோலிக்கத் திருச்சபையின் இரு குருக்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது
சைன அரசு.
குருக்கள் Joseph Wang Jianchenம் Joseph Li Deயும் திருப்பலி நிறைவேற்றச்
சென்று கொண்டிருந்த வழியில் இஞ்ஞாயிறு காலை காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
குரு
லி ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்.
திருத்தந்தைக்கு
விசுவாசமாக இருப்பதாலும், அரசின் கீழ் இயங்கும் சைனத் தேசியக் கத்தோலிக்க சபையில் இணைய
மறுப்பதாலும் பல குருக்கள் சைன அரசால் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது.