அயர்லாந்திற்கான திருத்தந்தையின் மேல்மட்ட திருச்சபை குழு
மே 31, 2010. திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட மேல்மட்ட திருச்சபை அதிகாரிகளின்
குழு ஒன்று தலத்திருச்சபைக்கு ஆன்மீக ஆலோசனைகளை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலர்
மீதான பாலின அத்துமீறல்களில் சில குருக்களும் துறவியரும் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பல்வேறு
சவால்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வரும் அயர்லாந்து தலத்திருச்சபையில் ஆயர்கள்,
குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலை விசுவாசிகளுக்கு பல்வேறு வகை உதவிகளை வழங்குவது
இக்குழுவின் நோக்கமாக இருக்கும் என்கிறது திருப்பீடச் செய்தித்துறை.
கர்தினால்கள்
Cormac Murphy O'Connor, Sean Patrick ஆகியோரை உள்ளடக்கி, திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள
இக்குழு, பாலர் மீதான பாலின அத்துமீறல் நடவடிக்கைகளிலும், வருங்காலக் குருக்களுக்கானப்
பயிற்சியிலும் மேலான ஆலோசனைகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.