1431 - பிரெஞ்சு வீராங்கனையான 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க், ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப்
பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
1815
- இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக்
கம்பனியின் ஆர்னிஸ்டன் (Arniston) என்ற கப்பல் தென்னாப்ரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில்
அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.
1845 - டிரினிடாட் மற்றும்
டொபாகோவுக்கு (Trinidad, Tobago) முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.
1971
- செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும்
என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1987 - கோவா தனி மாநிலமாகியது.
1989
– சீனாவின் தியானன்மென் (Tiananmen) வளாகத்தில் 33 அடி உயர ஜனநாயகத் தேவதை சிலையை போராட்ட
மாணவர்கள் திறந்தனர்