2010-05-29 14:48:11

மத்திய கிழக்குப் பகுதியை அணு ஆயுதங்கள் இல்லாத இடமாக மாற்றுவதற்கு நாடுகள் இசைவு


மே29,2010 மத்திய கிழக்குப் பகுதியை அணுஆயுதங்கள் இல்லாத இடமாக மாற்றுவதற்கு, அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் ஏகமனதாக இசைவு தெரிவித்துள்ளன.

நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் உலக அளவில் அணுஆயுதங்கள் களையப்படுவது குறித்து ஏறக்குறைய ஒருமாதம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட 28 பக்க அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 189 நாடுகள் தங்களது இசைவைத் தெரிவித்துள்ளன.

அணுப்பரவலைத் தடை செய்வதற்கு அழைப்பு விடுக்கும் கருத்தரங்கு ஒன்றை 2012 ஆம் ஆண்டில் கூட்டவும், அதில் இஸ்ரேல், ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கப்பட வேண்டுமெனவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.