ரோஜர் பானிஸ்டர் என்ற விளையாட்டு வீரர் 1954ஆம் ஆண்டில் நான்கே நிமிடத்தில் ஒரு மைல்
தூரம் ஓடி சாகசம் புரிந்து சாதனை படைத்தார். எவராலும் முடியாத இந்த விரைவான ஓட்டத்தை
எவ்வாறு சாதித்தீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னார் – நான் எனது மனத்திரையில் திரும்பத்
திரும்ப வெகு விரைவாக ஓடிப் பயிற்சி செய்தேன் என்று. எண்ணத்தின் வலிமையால் வென்ற பல விளையாட்டு
வீரர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை என்னும் விளையாட்டிலும் மனத்தைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால்
தரமான வாழ்க்கை, நீண்ட ஆயுள் மற்றும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடையலாம். ஓட்டப்பந்தய
வீரர் மார்க்கஸ் அல்லன் சொன்னார் – மனநிலைதான் என்னுடைய ஆட்டம். விரும்புகிற ஆனால் நடக்க
முடியாதவற்றை நேர்முறைச் சிந்தனை மூலம் சாதிக்கப் பழக வேண்டும் என்று.