2010-05-27 16:20:50

மங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த மக்களுக்கான பல்மத ஜெப வழிபாடு.


மே 27, 2010 மங்களூரின் அண்மை விமான விபத்தில் உயிரிழந்த மக்களுக்காக ஜெபிப்பதற்கென பல்மத கூட்டம் ஒன்றைக் கூட்டியதுடன் சிறப்புத் திருப்பலி ஒன்றையும் நிறைவேற்றியது மங்களூர் தலத்திருச்சபை.

40 குருக்களுடன் ஆயர் அலோசியஸ் பால் டி சூஸா நிறைவேற்றியத் திருப்பலியில், இத்தகைய பேரிடர்களின்போது மதம் இனம் என்ற வேறுபாடு நோக்காமல் அனைவருக்கும் உதவவேண்டியது வலியுறுத்தப்பட்டது.

இவ்விமான விபத்தில் இறந்த மக்களுடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் ஒருமைப்பாட்டை அறிவித்துள்ளதாகக் கூறினார் ஆயர் அலோசியஸ் பால் டி சூஸா.

உயிரிழந்த 158 பேர்களின் நினைவாக மலர் வளையங்களை வைத்த மதத்தலைவர்கள், மெழுகுத் திரிகளுடன் பல்மதப் பாடல்களைப் பாடி ஜெபித்தனர்.








All the contents on this site are copyrighted ©.