ஹாங்காங் செஞ்சிலுவை சங்கம் Maryknoll அருட்தந்தையை கௌரவித்துள்ளது
மே26,2010 ஹாங்காங்கில் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு Maryknoll மறைபோதக அருட்தந்தை Sean
Patrick Burke ஆற்றிய அரும்சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு மனிதாபிமான விருதை
வழங்குவதாக அறிவித்துள்ளது ஹாங்காங் செஞ்சிலுவை சங்கம்.
மறைந்த அருட்தந்தை Sean
Patrick Burke, ஹாங்காங்கில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக முப்பது
ஆண்டுகளாக நற்பணியாற்றினார் என்று ஹாங்காங் செஞ்சிலுவை சங்கம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இங்கிலாந்தைச்
சேர்ந்த Maryknoll சபை குரு Burke, 1978ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டவுடன்
ஹாங்காங்க்கு மறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார். அவர் அங்கு, வீடற்ற மற்றும் ஏழை முதியோர்க்கென
இல்லங்களையும் காப்பகங்களையும் தொடங்கி அரும்பணி ஆற்றினார். சிறைக் கைதிகளுக்கு ஆன்மீக
ஆலோசகராகவும் செயல்பட்டார். 2009ம் ஆண்டு மே 5ம் தேதி தனது 63வது வயதில் இறந்தார்.