விமான விபத்தில் பலியானோர் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கற்தந்தியை வெளியிட்டுள்ளது
இந்திய தலத்திருச்சபை.
மே24,2010. துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் மங்களூரில் விபத்துக்குள்ளாகியதில்
158 பேர் இறந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கற்தந்தியை வெளியிட்டுள்ளது
இந்திய தலத்திருச்சபை.
இவ்விபத்து குறித்து தலத்திருச்சபை ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளதாகவும்,
வார்த்தைகளால் இத்துயரம் களையப்பட முடியாது என்பதை உணர்ந்துள்ள திருச்சபை, பாதிக்கப்பட்ட
குடும்பங்களுடன் ஜெபத்தையும் ஒருமைப்பாட்டையும் அறிவிப்பதாகவும் அவ்விரங்கற்செய்தியில்
கூறியுள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ்.
தங்கள்
அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காக திருச்சபை செபிக்கும் அதேவேளை, இவ்விபத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வு ரீதியான, ஆன்மீக ரீதியான, மற்றும் பொருளாதார ரீதியான
உதவிகளை வழங்க திருச்சபை எப்போதும் தயாராக இருப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.