பெண்களை வீட்டு வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்கானச் சட்டம் பெண்களை அச்சுறுத்தலுக்கு
உள்ளாக்கியுள்ளது - இந்திய அருட்சகோதரிகள்
மே22,2010 பெண்களை வீட்டு வன்கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்கென இந்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள
சட்டம் பெண்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று இந்திய அருட்சகோதரிகள் அச்சட்டத்தைக்
குறை கூறுகின்றனர்.
பெண்களை உண்மையிலேயே பாதுகாப்பதற்கென கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்தின்கீழ்
அவர்கள் துன்புறுத்தப்படலாம் என்று உரைத்த இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞராகிய அருட்சகோதரி
ஜெசி குரியன், இது, இந்தச் சட்டத்தின் நோக்கத்தைத் தோல்வியடையச் செய்யும் என்று கருத்து
தெரிவித்தார்.
குடும்ப வன்முறைக்கெதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய
நோக்கம், பெண்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று இந்திய மத்திய அரசின் பெண்கள்
மற்றும் சிறார் வளர்ச்சிக்கான அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்திடம் கூறியுள்ளது.
பெண்கள்,
பெண்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று மற்றுமொரு
வழக்கறிஞர் அருட்சகோதரி ஜார்ஜ் பரிந்துரைத்தார்.
மாமியார், தனது மருமகள் மீது
தொடுத்த வழக்கை முன்னிட்டு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை வைத்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது.