தூய ஆவியார் பெருவிழா - முதல் வாசகம் – தி.ப. 2:1-11
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.'பெந்தக்கோஸ்து'
என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள் இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத்
திருவிழா பாஸ்காத் திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது. 2 திடீரென்று
கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த
வீடு முழுவதும் ஒலித்தது.3 மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும்
வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.
தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.5
அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள்
எருசலேமில் தங்கியிருந்தனர்.6 அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும்
தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர்.7 எல்லோரும் மலைத்துப்போய்,
இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?8 அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில்
இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி? என வியந்தனர்.9 பார்த்தரும், மேதியரும்,
எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,10
பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும்
உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும்,11 யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும்,
அரேகியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!
என்றனர்.