தூய ஆவியார் பெருவிழா - இரண்டாம் வாசகம். உரோ. 8 : 8-17
சகோதரர் சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.9
ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல்,
ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு
உரியோர் அல்ல.10 பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால்,
நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்: அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள்
உயிராய் இருக்கும்.11 மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால்,
கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய
உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.12 ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக்
கடமைப்பட்டிருக்கவில்லை: அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை.13 நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப
வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்: ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச்
சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.14 கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின்
மக்கள்.15 மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை:
மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம்,
அப்பா, தந்தையே என அழைக்கிறோம்.16 நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து
தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார்.17 நாம் பிள்ளைகளாயின்,
உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள்,
கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்: அப்போதுதான்
அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்