2010-05-22 14:40:34

திருத்தந்தை- நமது ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் நாம் இறைவனின் திருவருளால் சூழப்பட்டுள்ளோம்


மே22,2010 மாசிடோனியப் பாராளுமன்றத் தலைவர் Trjako Veljanoski தலைமையிலான பிரதிநிதிக் குழுவுக்கு உரையாற்றிய திருத்தந்தை, நமது ஒவ்வொரு செயலிலும் நடவடிக்கையிலும் நாம் இறைவனின் திருவருளால் சூழப்பட்டுள்ளோம் என்பதை இந்தச் சகோதரப் புனிதர்கள் சிரில், மெத்தோடியஸின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகின்றது என்று கூறினார்.

இந்தச் சகோதரப் புனிதர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையும் ஆழமான விசுவாசமுமே அவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள், புறக்கணிப்புகள், வெறுப்புகள் ஆகியவற்றின் மத்தியில், திருச்சபை மற்றும் திருவழிபாட்டுக்கானப் பணிகளைத் தைரியமுடன் செய்ய முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

புனிதர்கள் சிரில், மெத்தோடியஸின் உணர்வுகளைக் கைக்கொண்டு, ஒன்றிப்பிலும் அமைதியிலும் நாட்டைக் கட்டி எழுப்புவதற்கானப் பணிகளைத் தொடர்ந்து செய்வதற்கு அழைப்பு விடுப்பதாக மாசிடோனியக் குடியரசுப் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை.

பல்கேரிய மற்றும் மாசிடோனியக் குடியரசுகளின் பிரதிநிதி குழுக்களை தனித்தனியே சந்திப்பதற்கு முன்னர், முதலில் பல்கேரிய பிரதமர் Boïko Borissov ரையும், பின்னர், முன்னாள் யூக்கோஸ்லாவியக் குடியரசான மாசிடோனிய பாராளுன்றத் தலைவர் Trjako Veljanoski யையும் தனித்தனியே இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.