ரோம் நகரில் பொது நிலையினர்க்கான திருப்பீட அவை ஆண்டு நிறை அமர்வுக் கூட்டம்.
மே18,2010 அரசியல் சமூகத்தில் கிறிஸ்துவின் சாட்சியங்கள் என்ற தலைப்பில் இவ்வியாழன்
முதல் சனி வரை ரோம் நகரில் ஆண்டு நிறை அமர்வுக் கூட்டத்தை நடத்த உள்ளது பொது நிலையினர்க்கான
திருப்பீட அவை.
அரசியலில் பொதுநிலை விசுவாசிகள் உயிர்துடிப்புடன் செயல்படுவதற்கான
அர்ப்பணத்தை புதுப்பிக்கவேண்டும் என திருத்தந்தை தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதைத்
தொடர்ந்து இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அநீதிகளை எதிர்க்கவும்,
பொதுவாழ்வில் பொறுப்புணர்வுகளை ஏற்கவும், பொது நலனுக்காக உழைக்கவும் கத்தோலிக்க பொதுநிலை
விசுவாசிகள் முன்வரவேண்டும் என திருத்தந்தை பலமுறை அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கலந்துரையாடல்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ள இக்கூட்டத்தில் திருச்சபையும் அரசியல் சமூகமும், அரசியலில்
பொதுநிலை விசுவாசிகளின் பொறுப்புணர்வு, பொதுநிலை விசுவாசிகளுக்கு அரசியல் பயிற்சியளித்தல்,
வரலாறு மற்றும் ஜனநாயகத்தில் அரசியலின் பங்கு ஆகிய தலைப்புகளில் உரைகளும் இடம்பெறவுள்ளன.