மே18,2010 வரும் செப்டம்பரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இங்கிலாந்தில் பயணம் மேற்கொள்ள
உள்ளதை முன்னிட்டு ஜெபம் மற்றும் நடவடிக்கையின் பிரச்சாரம் ஒன்றை துவக்கியுள்ளது Aid
to the Church in Need எனும் உதவி அமைப்பு.
திருத்தந்தையின் கருத்துக்களுக்காக
திருப்பலி நிறைவேற்றிக் கொடுக்குமாறும் அந்த திருப்பலிகளுக்கென கொடுக்கப்படும் பணம் துன்புறும்
திருச்சபையின் குருக்களுக்கென செலவழிக்கப்படும் எனவும் கூறியுள்ளது இவ்வமைப்பு.
எக்காலத்தையும்
விட தற்போது திருத்தந்தை மற்றும் குருக்களுக்கு மக்களின் ஜெபங்களும் ஆதரவும் தேவைப்படுவதாகத்
தெரிவித்த இவ்வமைப்பின் இங்கிலாந்து பிரிவு தேசிய இயக்குனர் நெவில்லே கிர்க் ஸ்மித்,
அவர்களின் விசுவாசம் பலப்படுத்தப்படவும் குருத்துவம் புதுப்பிக்கப்படவும் ஜெபிப்போம்
என அழைப்பு விடுத்தார்.
Aid to the Church in Need என்ற கத்தோலிக்க அமைப்பானது
யெருசலேமில் வாழும் கிறிஸ்தவர்களுக்கான வீடுகள், ஈராக் கிறிஸ்தவர்களுக்கான அவசர உதவிகள்,
குருமட மாணவர்கள் மற்றும் துறவறத்தார்க்கான உதவிகள், கோவில்கள் கட்டுவதற்கான உதவிகள்,
சமூகத்தொடர்பு முயற்சிகள் உட்பட எண்ணற்ற ஆக்கபூர்வ உதவிகளைச் செய்து வருகின்றது.