மே15,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பாப்பிறைப் பணிக்கான ஆதரவையும் பாசத்தையும் நன்றியையும்
வெளிப்படையாய்க் காட்டும் விதமாக இஞ்ஞாயிறு நண்பகலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வத்திக்கான்
புனித பேதுரு வளாகத்திற்கு வரவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சமூகத்
தொடர்பு நாளான இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு திருத்தந்தை அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கும்
போது இம்மக்கள் வளாகத்தில் கூடிநின்று திருத்தந்தையுடனானத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பார்கள்.
இத்தாலிய ஆயர் பேரவை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தேசிய பொதுநிலையினர் ஆலோசனை
அவை இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.