போர் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. போர்க்களத்தின் நிலவரத்தை அறிந்துவர ஆளனுப்பினான்
அரசன். சென்றவன் திரும்பி வந்தான். அவனிடம் அரசர், ஏதேனும் செய்தி உண்டா? எனக் கேட்க,
ஆம். அரசே ஒரு நல்ல செய்தி. ஒரு கெட்ட செய்தி இருக்கின்றன என்று அவன் பதில் சொன்னான்.
ஆர்வம் மேலிட்டவனாய் அரசன் அவனிடம் முதலில் நல்ல செய்தியைச் சொல்லும் என்றான். அரசே,
போர்க்களத்தில் போர் வீரர்கள் சாப்பிடுவதற்கு கற்கள் மட்டுமே இருக்கின்றன. இது நல்ல செய்தி.
அதுவும் போதுமானதாக இல்லை. இது கெட்ட செய்தி என்றான்.
பெரியவர்கள் சொல்கிறார்கள்
– பகிர்வுக் குறையே பற்றாக்குறை என்று.